articles

img

முற்போக்கு முதலாளித்துவமா? மோசடி முதலாளித்துவமா? -பேராசிரியர் மு.நாகநாதன்

11.8.24 தி இந்து ஆங்கில நாளேட்டில் (பக்.14) நோபல் பரிசுப் பெற்ற பொருளியல் அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்சின் நேர்காணல் வெளியிடப் பட்டது. நேர்காணலை எடுத்த திரு.பிரசாந்த பெருமாள் எழுப்பிய நான்கு கேள்விகளுக்கு ஸ்டிக்லிட்ஸ் விடையளித்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளில் உலகமய மாக்கல் பற்றியும், சந்தைப் பொருளாதாரம் ஒரு சார்பாக இயங்குவது பற்றியும் ஏழு நூல்களை ஸடிக்லிட்ஸ் எழுதியுள்ளார்.

இந்நூல்களில் வளர்கின்ற  நாடுகளி லிருந்து  வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்க ளைச் சுரண்டுவதால், சுற்றுச்சூழலும் வளர்கின்ற நாடுகளின் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்ற கருத்தை கூறியுள்ளார்.

தனது (Free-fall – Free Markets and Sinking of the Global Economy)  ‘தடை யற்ற வீழ்ச்சி’  என்ற நூலில், “வாஷிங்டன் கொள்கைத் திட்டமும், அதன் தொடர்பான அதிதீவிர சந்தைப் பொருளாதாரமும் இறந்துவிட்டன.  இதற்கு முன்பு வளர்ந்த நாடுகளுக்கும், வளர்கின்ற நாடுகளுக்கும் சரிசமமான போட்டி போன்ற கருத்து விவா தம் முற்றுப் பெற்றுவிட்டது.  பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளின் தனியார் நிறு வனங்களை எவ்வகையில் காப்பாற்ற முயற்சிக்கின்றனவோ, அதே கொள்கையை ஏழை நாடுகள் பின்பற்ற முடியாது. மோச மான முறையில் மேலாண்மை செய்யப்பட்ட  உலகமயமாதல் இடர்களை இந்த நாடுகள் உணர்ந்துவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சமத்துவமின்மையின் விலை - இன் றைய சமூகம் எவ்வாறு நமது எதிர்கா லத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது” (The Price of Inequality – How today’s divided Society Endangers our Future),என்ற நூலில் ஸ்டிக்லிட்ஸ், “அமெரிக்காவின் அரசி யலமைப்பு பணக்காரர்கள் பக்கம் சாய்ந்து விட்டது. அதனால் ஏற்றத்தாழ்வுகள் பெரு மளவில் பெருகியுள்ளன.” அமெரிக்காவின் ஒரு விழுக்காட்டு மக்களின்  நலனிற்காக ஒரு விழுக்காட்டினர் ஆட்டிப்படைக்கின்ற, ஒரு விழுக்காட்டினரின் ஆட்சிதான் நடக்கின் றது என்றும் சுட்டியுள்ளார்.

இத்தகைய முதலாளித்துவ விமர்சன கருத்துக்கொண்ட ஸ்டிக்லிட்ஸ், இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முற் போக்கு முதலாளித்துவத்தைப் பின்பற்றுவ தற்குப் பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது நகைச்சுவைதானோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஏழைகளின் செலவில்  பலனடையும் பணக்காரர்கள்

‘ஓநாய்களின் சுதந்திரம் என்பது ஆடுக ளின் மரணம்தான்’ என்ற தத்துவ அறிஞரான இசய்யா பெர்லின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும், ‘ஏழைகளின் செலவில்தான் பணக்காரர்கள் பலனடைகின்றனர்’ என்ற கருத்தையும் கூறியுள்ளார்.  இதே போன்று மற்றொரு கேள்விக்கான பதிலில், ‘தீவிர மான முதலாளித்துவ அமைப்பு முறையில் அதிக அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளும், சுரண்டலும், முற்றுரிமை அதிகாரமும், பொருளாதார நிறையற்றதன்மையும், சுற்றுச்சூழல் பாதிப்பும் மோசமாகவே இருக்கும் என்ற கருத்தைக் குறிப்பிடுகிறார்.

சந்தைப் பொருளாதாரம் சரியான போட் டியில் அமையாது என்று கூறுவதும், அது பாடத்திட்டத்தில் உள்ள ஏட்டுக்சுரைக்காய் போன்றது என்ற கேள்விக்கு, “நமது சந்தை யில் போட்டியுள்ளது. கூகுள் மைக்ரோ சாப்ட், பேஸ்புக்  போன்ற நிறுவனங்கள் போட்டித்தன்மையில்தான் செயல்படு கின்றன என்றும் குறிப்பிட்டு விட்டு, “சந்தை யில்  போட்டித்தன்மையில் ஏற்படும் சிறித ளவு சரிவு கூட பொருளாதாரத்தில் திறமை யற்ற தன்மையும், பெருமளவிலான சுரண்ட லுக்கு வழிவகுத்துவிடும்” என்று குறிப்பிடு கிறார்.

முற்போக்கான முதலாளித்துவம் இந்தி யாவிற்கு எவ்வகையில் பொருத்தமாக அமையும் என்ற கேள்விக்கு ஸ்டிக்லிட்ஸ், “இந்தியா பெருமளவிற்குத் தாராளமய மாக்கல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிதித்துறையில் தாராளமயமாக்கல் உள்ளது. ஆனால் சுகாதாரம், வீட்டுவசதி போன்ற துறைகளில் உரிய நடவடிக்கை களை அரசு எடுக்கவில்லை. தங்களது நியாயமான வரிப் பங்கினை அரசிற்குச் செலுத்தாத பெரும் கோடீசுவரர்கள் உரு வாக அரசு வழிவகுத்துள்ளது. எனவே, நான் கூறுகின்ற முற்போக்கான முதலாளித்துவம் வளர்வதற்கு வாய்ப்புள்ளது” என்று பதில ளித்துள்ளார்.

இந்தக் கேள்வி பதில்களில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. 

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 9 விழுக்காடாக உயர்ந்துள் ளது என்று இந்தியப் பொருளாதாரக் கள  ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது கடந்த 8 ஆண்டுகளில் காணப்படாத வேலையின்மையின் அளவாகும்.

தோல்வியைத் தழுவும் திட்டங்கள்

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் திட்டங்கள் பெரும் தோல்வியைத் தழுவி வருகின்றன என்பதற்கான புள்ளிவிவரங்க ளை 2023ஆம் ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது.

உலகமயமாக்கல்  திட்டத்தை நடை முறைப்படுத்திய 1990ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீடு 0.1 விழுக்காடாக இருந்தது. 2020ஆம் ஆண்டில் 6.5 விழுக்காடாக உயர்ந்தது.

ஆனால் இத்தகைய முதலீடுகளைப்  பெறுவதற்காக ஒன்றிய அரசு அளித்த  நேர்முக, மறைமுக வரிச்சலுகைகளைக் கணக்கிட்டால் பல இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும்.

இவற்றைத் தவிரப் பன்னாட்டுப் பெரு நிறுவனங்களுக்காக அளிக்கப்பட்ட நிலங்கள், மின் இணைப்பு, சாலை வசதி, நீர் வழங்கல் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அரசு பல லட்சம் கோடி களை இழந்துள்ளது.

இத்தகைய இழப்புகளுக்குப் பிறகு வெளிநாட்டு முதலீடுகள் கடந்த பத்தாண்டு களில் படிப்படியாகக் குறைந்தே வருகிறது.

உலக முதலீட்டு அறிக்கையின்படி வெளிநாட்டு முதலீடு 2023ஆம் ஆண்டில் 2.2 விழுக்காடாகச் சரிந்துள்ளது.

இதைத் தவிர வெளிநாட்டு முதலீடுகள் இருப்பிலும் இந்தியா பெரும் சரிவினை நோக்கி பயணம் செய்கிறது.

வெளிநாட்டு முதலீடுகள் இருப்பில் (Foreign direct investment  stock) நெதர் லாந்து, 5.5. விழுக்காடு, சிங்கப்பூர் 5.4 விழுக் காடு, ஆனால், இந்தியாவின் வெளிநாட்டு முதலீடு இருப்பு 1.1. விழுக்காடே ஆகும்.

முதலாளிகளுக்கு வாரி  வழங்கப்படும் வரிச்சலுகைகள்

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளைத் தொடர்ந்து ஒன்றிய அரசு வாரி வழங்கி வருகிறது.

சான்றாக, நிறுவனங்கள் மீது விதிக்கப் படும் நேர்முக வரியைப் (Corporation Income Tax) புதிதாகத் தொடங்கும் நிறுவ னங்களுக்கு 22 விழுக்காட்டிலிருந்து 15 விழுக் காடாக ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019ஆம் ஆண்டில் குறைத்தார்.

இதன் காரணமாக, 2023-24ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த வருமான வரி வரு வாய் 10 விழுக்காடாகக் குறைந்துளது.

பல லட்சம் கோடி வரிச்சலுகைகளை அளித்த பிறகும் புதிய முதலீடுகளைப் பெற இயலவில்லை என்பதற்கு இது சரியான  சான்றாகும். 

அதே நேரத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அரசு, தனியார் துறை ஊழியர்கள் ஆகியோர் வருமான வரி செலுத்தியவர்க ளின்  எண்ணிக்கையும் வருமான வரி வழி யாக வந்த வருவாயும் ஒன்றிய அரசிற்கு அதிகரித்துள்ளது.

இந்த நடுத்தர வருமானப் பிரிவினரின் எண்ணிக்கை 2013-14 முதல் 2022-23 வரை 3.6 கோடியிலிருந்து 7.5 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது.

கொடுங்கோன்மைப் பொருளாதாரம்

ஏழை நடுத்தர வருமானப் பிரிவினரின் குடும்பச் சேமிப்பு 2021ஆம் ஆண்டில் 34 லட்சம் கோடியாகும். 2023இல் குடும்பச் சேமிப்பு அளவு 17 லட்சம் கோடியாக இந்தி யாவில் சரிந்துள்ளது.

இதே காலகட்டத்தில், 2023இல் ஏழை நடுத்தரப் பிரிவினரின் கடன் 47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

2024இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுச் சென்ற மாதம் ஒன்றிய அரசு அளித்த நிதிநிலை அறிக்கையில் சுகா தாரம், கல்வி போன்ற மானுட வளத்தைப் பெருக்கும் துறைகளுக்கு நிதியளவு குறைக் கப்பட்டுள்ளது.

இத்தகைய புள்ளிவிவரங்களின் அடிப் படையில் பார்த்தால் ஸ்டிக்லிட்ஸ் எதை முற் போக்குப் பொருளாதாரம் என்று அழைக்கி றார்?

ஸ்டிக்லிட்ஸ் நேர்காணலில் குறிப்பிட்ட தீவிர முதலாளித்துவத்தைவிட இந்தியாவில்  கொடுங்கோன்மையான பொருளாதாரம் தான் தற்போது இயங்கி வருகிறது. நிதி நிறு வனங்களின் மோசடி, பங்குச் சந்தையில் மோசடி, அரசு வங்கிகளில் பெற்ற கடன்க ளைத் திருப்பியளிக்காமல் முதலாளிகள் செய்யும் மோசடிகளைத்தான் முற்போக்கு முதலாளித்துவம் என்று  ஸ்டிக்லிட்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவில் நடைமுறையில் நாம்  காண்பது மோசடி முதலாளித்துவம்.

ஒரு வேளை மோசடி முதலாளித்துவத் தைத்தான் முற்போக்கு முதலாளித்துவம் என்று ஸ்டிக்லிட்ஸ் கூறுகிறாரா?

ஒன்று மட்டும் உண்மை- 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் அளவு நாட்டு ஓட்டு மொத்த வருமானத்தை விட 100 விழுக்காடு கடந்து விட்டது.

கடன் மட்டும் பெருகவில்லை. விலை உயர்வு, வேலையின்மை, மக்களிடம் வரு மான, செல்வ ஏற்றத் தாழ்வு ஆகியன பெருகி, அமெரிக்கப் பொருளாதாரம் 1930களில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகி றது. இத்தகைய போக்கினையும் முற் போக்கு முதலாளித்துவம் என்று ஸ்டிக் லிட்ஸ் அழைப்பாரா?